Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்தை தோற்கடிப்பதில் குறியாக இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.
பிரணாப் எழுதிய ‛‛கூட்டணி ஆண்டுகள்'' (தி கோலிஷன் இயர்ஸ்) என்ற சுயசரிகை புத்தகத்தில் கூட மம்தா பற்றி குறிப்பிட்ட பிரணாப், ‛மம்தா ஒரு பயமே இல்லாத பிறவி போராளி. போராடி போராடியே முன்னேறியவர்'' என்று பாராட்டி இருந்தார்.
இதற்கிடையில் பிரணாப் மகனை மம்தா தோற்கடிக்க துடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மம்தாவின் எதிரியான காங்கிரஸ் கட்சியில் அபிஜித் சுறுசுறுப்பாக இயங்குவது மம்தாவின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.